வெளிநாட்டில் கணவருக்கு வேலை… மனைவியின் தகாத காதல் – இதனால் நேர்ந்த கொடூரம்…!

tn death

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான பாலசுப்பிரமணி, இவருக்கு மீனா (40) என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், குடும்ப வறுமை நிலை காரணமாக வாழ்வாதாரத்திற்காக பாலசுப்பிரமணி மலேசியா சென்று அங்கு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவருக்கும் மீனாவிற்கும் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் தகாத காதலாக மாறியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், வெளிநாடு செல்ல வேண்டும் என்று சுரேஷ் மீனாவிடம் ரூ.2 லட்சம் வரை பணம் பெற்று, மலேசியாவில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், அவர்களின் கள்ளத்தொடர்பு சுரேஷின் குடும்பத்தார்க்கு தெரியவந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு சுரேஷின் தாய், மனைவி, சகோதரி ஆகியோர் மீனாவின் வீட்டிற்குச் சென்று அவரை அவமானப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

சுரேஷிடம் நடந்ததை கூறி மனவேதனை அடைந்த மீனா, கடந்த மாதம் 20ஆம் தேதி வீட்டில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர்க்கு வந்த கணவர் பாலசுப்பிரமணி தனது மனைவிக்கு நேர்ந்த சம்பவங்களை அறிந்தார்.

பின்னர், தனது மனைவியின் இந்த மரணத்துக்கு சுரேஷின் குடும்பம் தான் காரணம் என்று லால்குடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் எழுத்துப்பூர்வமாக கடந்த 14ம் தேதி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஸ்கூட் ஏர்லைன்ஸ்!