இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்: 5 மில்லியன் பரிசு தொகையை தட்டி சென்றார்!

அபுதாபி பிக் டிக்கெட் நடத்திய வாராந்திர மின்னணு டிராவில் இந்திய நாட்டை சேர்ந்த பெஞ்சமின் ஜான் என்ற ஆடவர் வெற்றிபெற்றுள்ளார்.

அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது 250,000 திர்ஹம் பரிசு தொகையை வென்றுள்ளார்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் வசிக்கும் இவர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த டிராவில் முயற்சி செய்து, இறுதியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 40 மாதங்களாக டிக்கெட்டுகளை வாங்கிய அவர், இறுதியாக இன்று மிக பெரிய வெற்றியைப் பெற்றதாக கூறினார்.

அந்த பரிசு தொகையை எப்படிச் செலவிடப் போகிறேன் என்று தெரியவில்லை என வெற்றி மகிழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

மகளிடம் தவறாக நடந்துகொண்ட கொடூர தந்தை: 42 மாத சிறை, ஆறு பிரம்படி விதிப்பு