சுற்றுலா விமானம் மூன்று பயணிகளுடன் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஐஸ்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏரியின் அடிப்பகுதியில் அந்த விமானத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சனிக்கிழமை (பிப்., 5) போலீசார் தெரிவித்தனர்.
கெப்பல் கிளப் நீச்சல் குளத்தில் பெண் மரணம் – மூழ்கி உயிரிழந்தார் என சந்தேகம்
அந்த மூன்று சுற்றுலாப் பயணிகளும், சுற்றிப்பார்க்க கடந்த வியாழன் அன்று Cessna 172N வகை விமானத்தில் சென்றனர்.
அவர்கள், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இன்னும், விமானம் மேல் பகுதிக்கு எடுக்கப்படவில்லை என்றும், உடல்கள் எதுவும் இதுவரை மீட்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்ற இரு பயணிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கடலோரகாவல் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.