அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் மீண்டும் வரவேற்க மியான்மர் தயாரா உள்ளதாக AFP கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்கான தேசிய மத்திய குழு இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளது.
இந்திய பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் திட்டம்: “தமிழ்நாடு தான் டார்கெட்” – மாஸ் காட்டும் தலைநகர் சென்னை!
அடுத்த மாதம் ஏப்ரல் 17 முதல் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் மியான்மர் அதன் எல்லைகளை திறக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுத் தடை தற்போது நீக்கப்பட உள்ளது.
கட்டுப்பாடுகள்
மியான்மருக்குள் நுழையும் பயணிகள் ஒரு வாரம் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இரண்டு PCR சோதனைகளுக்கு உட்பட வேண்டும் .
முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இதனை மியான்மர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக AFP கூறியுள்ளது.