சிங்கப்பூரில் உலகின் மிக அதிகமான மில்லியனர்கள் உள்ளனர், ஒவ்வொரு ஆறு குடும்பங்களில் ஒரு குடும்பம் குறைந்தது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கக்கூடிய செல்வத்தைக் கொண்டுள்ளது.
- சிங்கப்பூர் வலுவான சர்வதேச வர்த்தக இணைப்புகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும்.
- சிங்கப்பூர் உலகளாவிய வர்த்தகம், நிதி மற்றும் போக்குவரத்துக்கான மையமாக விளங்குகிறது.
- தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, உலக வங்கியால் வணிகம் செய்வதற்கான எளிதான இடமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
- உலகப் பொருளாதார மன்றம் (WEF) சிங்கப்பூரை தொழில்நுட்பத்தால் தயாரான நாடாகக் கருதுகிறது. உலகின் 2 வது போட்டி நாடாகவும் பார்க்கிறது.
- சிங்கப்பூர் உலகின் 3-வது பெரிய அந்நிய செலாவணி மையமாகும். உலகின் 3வது பெரிய நிதி மையமாகவும் விளங்குகிறது.
- சிங்கப்பூர் உலகின் 3-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வர்த்தக மையத்தைக் கொண்டுள்ளது.இது 1990 களில் இருந்து முதல் இரண்டு பரபரப்பான கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாகும்.
- கடந்த சில வருடங்களில் S&P, Moody’s மற்றும் Fitch உட்பட அனைத்து முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் AAA இறையாண்மை மதிப்பீட்டைக் கொண்ட ஒரே ஆசிய நாடு சிங்கப்பூராகும்.
- சிங்கப்பூர் ஆசியாவின் செல்வாக்கு மிக்க நகரமாகவும், போர்ப்ஸ் பத்திரிக்கையின்படி உலகில் நான்காவது இடத்திலும் உள்ளது.
- சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியம் இல்லை, அதனால் போட்டித்தன்மை குறைவாக நிலவுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வருமான ஏற்றத்தாழ்வுகள் நிலவ இதுவும் ஒரு காரணமாகும்.
- சிங்கப்பூரில் உள்ள சொத்துகள், உலகின் மிக விலையுயர்ந்த ஒன்றாக இருப்பதால், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.