திருச்சி வந்த விமானம்… கேட்பாரற்று கிடந்த ரூ. 41 லட்சம் மதிப்புள்ள பசை வடிவில் தங்கம் – போலீஸ் விசாரணை

Nakkheeran

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 41 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று முன்தினம் 29ஆம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தென் கொரியாவின் Jeju தீவு போல் அழகாக காட்சியளிக்கும் புதிதாக திறக்கப்பட்ட “சாங்கி பே பார்க் கனெக்டர்”

அதில், ஏப்ரான் என்னும் விமான வெளிப்பகுதியில் ஒரு பார்சல் தனியாக கிடந்துள்ளது. அதை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.

அப்போது அதில் பேஸ்ட் வடிவில் தயார் செய்யப்பட்ட 850 கிராம் கடத்தல் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து விமான பயணிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காபி ஷாப்பில் வெளிநாட்டு ஊழியரின் பையை நைசாக தூக்கி சென்ற நபர் (CCTV வீடியோ) – வலைவீசி தேடிவரும் போலீஸ்