சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி சாமர்த்தியமாக கடத்தி வந்த தங்கத்தை கண்டறிந்த அதிகாரிகள்!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் சில பயணிகளிடம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான்.

அந்த வரிசையில், சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் நேற்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.

பிளீஸ்..! இனி நம்ம ஆட்கள் மேல் எப்படி மதிப்பு வரும்..? சிங்கப்பூரை திணறடிக்கும் லிட்டில் இந்தியா!

வழக்கம் போல விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, கடலூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற பயணியிடம் இருந்து கடத்தல் தங்கம் கண்டறியப்பட்டது.

அவர் ஸ்பேனரில் மறைத்து வைத்து சுமார் ரூ.4.60 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்ததும் சோதனையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் 882 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு – மேலும் புதிதாக 797 பேருக்கு ஓமிக்ரான் தொற்று