தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியிட படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி மற்றும் மெர்சல் ஆகிய திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இதனையடுத்து இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவற்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. தற்போது படத்திற்காக டப்பிங்யை தளபதி விஜய் செய்து வருகிறார்.
இந்தப் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இம்முறை அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. அந்த தினத்தில் படம் வெளியிட்டால், வெளிநாடுகளில் கடுமையான வசூல் பாதிப்பு ஏற்படும்.
ஆகையால், இந்த தினம் தான் என முடிவு செய்தால், வெளிநாட்டு உரிமம் விலையைக் குறைக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
ஆனால், படக்குழுவோ அக்டோபர் 24 அல்லது 25-ம் தேதியில் வெளியிட்டால் தமிழகத்திலும் வசூலை அள்ளிவிடலாம் என்று தங்களது வெளியீட்டுத் தேதியை மாற்றத் தீர்மானித்துள்ளது.
இதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. புதிய வெளியீட்டுத் தேதியை டீஸருடன் கூறலாம் என்று திட்டமிட்டுள்ளது.
இதுவரை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை மட்டும் ‘பிகில்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.