சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச மருதாணி அலங்காரம்..!

Free Henna Ahead of deepavali

SMRT நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிராங்கூன், டோபி காட் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச மருதாணியிடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் மருதாணி போடுவதற்காக திரளாக ஒன்று கூடினர். இந்த ஆண்டு தான் முதன் முதலில் இந்த சேவை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இனி வரும் ஆண்டுகளிலும் இந்த சேவை தொடரும் என்று சேவை குழு தெரிவித்துள்ளது.