சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா நாளை (ஜனவரி 28) COVID-19 கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சில ஆலோசனைகளை ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா பேருந்துகள் – முன்பதிவு செய்யலாம்!
ஆலோசனைகள்
- பக்தர்களுக்கு காவடி எடுக்க அனுமதி இல்லை
- சிராங்கூன் சாலையில் இருந்து பாத ஊர்வலம் நடைபெறாது
- அலகு குத்திய பக்தர்களுக்கு ஆலயம் உள்ளே அனுமதி இல்லை
- முன்பதிவு செய்யப்பட்ட பால்குடங்களுக்கு மட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி
- முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சாலை மூடப்படும்
திருவிழாவை இடையூறு இல்லாமல் எளிதாக்குவதற்காக, இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை மறுநாள் இரவு 11.30 மணி வரை, டேங் சாலை வாகன போக்குவரத்திற்கு மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தைப்பூசத் திருவிழா 2021: போக்குவரத்தில் சில மாற்றங்கள் – காவல்துறை