இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஆகும். இந்த விமான நிறுவனம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி, மாலத்தீவு, பஹ்ரைன், மஸ்கட், ஜெட்டா உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து விமான சேவை வழங்கி வருகிறது.
குறிப்பாக, இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவை வழங்குகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.