சிங்கப்பூரில் 13வது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.
13வது சம்பவமாக உறுதி செய்யப்பட்ட அவர் 33 வயது ஆடவர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
இவருக்கு ஏற்பட்ட குரங்கம்மை நோய்த்தொற்றுக்கும் முந்தைய குரங்கம்மை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது சிங்கப்பூரின் 8 வதாக பதிவாகும் தொடர்பு இல்லா குரங்கம்மை சம்பவமாகும். 5 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
தொடர்பு தடமறியும் பணிகள் நடந்து வருவதாகவும் MOH தெரிவித்துள்ளது.
ஒரு சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?