“14 வயது சிறுமியை ஐந்து நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 14 வயது சீன சிறுமியை கடந்த பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று இரவு 08.00 மணி முதல் அதாவது கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 156 பெடோக் சவுத் அவென்யூ 3- ல் (Blk 156 Bedok South Avenue 3) காணப்பட்டுள்ளார். அப்போது, சிறுமி ஏர் ஜோர்டன்ஸ் டாப் (Air Jordans Top) மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்!

சிறுமியை யாரேனும் பார்த்தாலோ, அவரை பற்றி தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது.