“சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை 4 நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

"சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை 4 நாட்களாக காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கடந்த அக்டோபர் 25- ஆம் தேதி அன்று இரவு 10.00 மணி முதல் மேலே புகைப்படத்தில் உள்ள 14 வயது மலாய் சிறுமியைக் காணவில்லை. சிறுமி கடைசியாக, புளோக் 174D ஹவ்ஹாங் அவென்யூ 1- ல் (Blk 174D Hougang Ave 1) இருந்துள்ளார். சிறுமி கருப்பு நிற டி-சர்ட் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்திருந்துள்ளார்.

‘பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயரம்’- சிங்கப்பூரில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை!

இந்த சிறுமியை யாரேனும் பார்த்தால், உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

சிறுமி காணாமல் போய் சுமார் நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், சிங்கப்பூர் காவல்துறையினர் தீவிர தேடி வருகின்றனர்.