சிங்கப்பூரில் கோ பெய் சின் பேர்லின் என்ற 14 வயது சிறுமியை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போன சிறுமியை பற்றி தெரிந்தால் தகவல் தருமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுமி, இன்று ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கடைசியாக சோவா சூ காங் MRTயில் காணப்பட்டார்.
தகவல் தெரிந்த நபர்கள் 1800 255 0000 என்ற காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஆன்லைனிலும் தகவலை அளிக்கலாம். கண்டிப்பாக அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை