“15 வயது சிறுவனை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

"15 வயது சிறுவனை காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 15 வயது சிறுவனை இன்று (அக்.31) காலை 07.00 மணி முதல் காணவில்லை. புளோக் 557 பெடோக் நார்த் தெரு 3- ல் (Blk 557 Bedok North St 3) இந்த சிறுவன் கடைசியாக இருந்துள்ளார். ரெட்புல் டிசைனுடன் (Redbull Design) கருப்பு நிற மேலாடையையும், சிவப்பு நிற பேண்ட்டையும் அணிந்திருந்துள்ளார்.

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐவரிடம் 3 கிமீக்கு S$100 கட்டணம் வசூல் செய்த டாக்ஸி

இந்த சிறுவனை யாரேனும் பார்த்தால், உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பதிவுடன், காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது காவல்துறை.