ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150 ஆண்டு கொண்டாட்டத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்கள் ஒன்றாக சோலார் பேனல்களை ஐ.நா தலைமையகத்திலும் மற்றும் நியூயார்க்கில் உள்ள காந்தி அமைதி பூங்காவில் திறந்து வைத்தனர்.
அனைத்து தலைவர்களும் பங்குகொண்ட இந்நிகழ்வில் மகாத்மா காந்தி குறித்த முத்திரையை ஐ.நா வெளியிட்டது.
இதில் சிங்கப்பூர் லீ ஹ்சியன் லூங், பங்களாதேஷ் ஷேக் ஹசீனா, தென் கொரியா மூன் ஜே-இன், நியூசிலாந்து ஜசிந்தா ஆர்டெர்ன், ஜமைக்கா ஆண்ட்ரூ ஹோல்னஸ் மற்றும் யு.என்.எஸ்.ஜி. அன்டோனியோ ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.