மோட்டார் சைக்கிள் திருட்டு… 23 வயதுடைய இருவர் அதிரடி கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

மோட்டார் வாகன திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93ல் உள்ள அடுக்குமாடி மாடி கார் நிறுத்துமிடத்தில் நேற்று (ஜன. 6) திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் S$1 டிக்கெட் வாங்கி S$5.5 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற அதிஷ்டசாலி!

இதனை அடுத்து, ஜூரோங் போலீஸ் பிரிவு மற்றும் கிளெமென்டி போலீஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் கேமராக்களின் உதவியுடன் சந்தேகத்திற்குரிய இருவரின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தகவல் கிடைத்த 11 மணி நேரத்தில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

மோட்டார் வாகனத்தை திருடிய அந்த சந்தேக நபர்கள் ஜனவரி 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.

சிங்கப்பூர் தைப்பூசம் 2023…. 30,000 பக்தர்கள், 200 காவடிகள்… பிரம்மாண்டமாக மீண்டும் வரும் தைப்பூசத் திருவிழா!