சிங்கப்பூரில் நோன்பு பெருநாள் முன்னிட்டு உரிமம் இல்லாமல் இயங்கிய 24 கடைகளுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
Hari Raya Mega Sale சந்தையில் அந்த கடைகள் அமைக்கப்பட்டதாகவும், அதற்கு முறையான உரிமம் வாங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 24 உணவுக் கடைகளும் மூடப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் எஸ்போவில் சிலர் பதிவுசெய்யாமல் கடை நடத்தி, அதில் வேலை செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்ததாக SFA குறிப்பிட்டுள்ளது.
இந்த கடைகள் தற்காலிகமாக இயங்கக்கூடியது என்பதை நாம் அறிந்தது தான், ஆனால் அதற்கான அனுமதி SFA விடம் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.