சிம் லிம் டவரில் 24 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 3 அன்று இரவு 9.35 மணியளவில் ஜாலான் பெசாரில் இருந்து உதவி வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 24 வயதான பெண் ஒருவர் அசையாமல் கிடந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் சதிச் செயல் எது குறித்தும் சந்தேகிக்கவில்லை.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.