திருச்சியில் ரூபாய் 15.47 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சியில் ரூபாய் 15.47 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி மண்டல வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Woodleigh அருகே விபத்தில் சிக்கிய 46 வயது ஆடவர் மரணம்

இதையடுத்து, இன்று (செப்.14) மாலை 04.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் TR566 என்ற விமானம் 200- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

சிங்கப்பூரில் இருந்த வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான்நுண்ணறிவுப் பிரிவின் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தனது உடலில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது.

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்

அதைத் தொடர்ந்து, அந்த பயணியிடம் இருந்த சுமார் ரூபாய் 15,47,000 மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியைத் தனியே அழைத்துச் சென்று அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், அந்த பயணியை அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.