புகிஸில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூன்று இளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த நவ.18 அன்று பிற்பகல் 2.08 மணியளவில் 229 விக்டோரியா ஸ்ட்ரீட்டில் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த அந்த இளையர்கள் குழுவில் சோதனை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏமாற்று மோசடி வழக்கு தொடர்பாக, 18 வயது இளம்பெண் மற்றும் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு ஆண் இளையர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் புகிஸில் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்பதை ஷின் மின் நியூஸ் புரிந்துகொள்வதாக கூறியுள்ளது.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..