வேலையிடத்தில் மேலும் ஒரு ஊழியர் மரணம்: இயந்திரம் விழுந்து விபத்து – யார் அவர்?

45th workplace fatality in 2022
Pexels

சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) காலை விபத்து ஏற்பட்டது. இறந்தவர் 31 வயதான ஊழியர் என்பது கூடுதல் தகவல்.

சிங்கப்பூரில் இந்த இந்த ஆண்டு மட்டும் இதுவரை வேலையிடத்தில் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

வாள் வீசி ஊழியரை தாக்கிய நபருக்கு பிரம்படி விதிப்பு

ஃபோர்க்லிஃப்ட் மூலம் இயந்திரத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல மாற்றியபோது, அந்த இயந்திரம் அவர்மீதே கவிழ்ந்தது என்று மனிதவள அமைச்சகம் (MOM) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவரின் பெயரை அமைச்சகம் வெளியிடவில்லை, மயக்கமடைந்த அவர் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிங்கப்பூரர் ஊழியரான அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்து நேற்று காலை 7.53 மணியளவில் 601 ரைபிள் ரேஞ்ச் சாலையில் அருகில் நடந்தது.

“வித்தியாசமாக எதையோ கண்டேன்” என கடற்கரையில் இருந்து தெறித்து ஓடிய சிறுவன் – விரைந்து வந்த போலீஸ்