மோட்டார் பொருத்திய சக்கர-நாற்காலியில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பறந்து சென்ற ஊழியர் – அதிர்ச்சி அடைந்த வாகனமோட்டிகள் (காணொளி)

motorised-wheelchair-pma-sengkang-west-way-road

செங்காங் வெஸ்ட் வே வழியில் நேற்று (ஏப்ரல் 10) இரவு பச்சை நிற உணவுப் பையுடன் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் ஊழியர் ஒருவர் 50 கிமீ வேகத்தில் கிராப்ஃபுட் சீருடை அணிந்து பயணிப்பதை பல வாகனமோட்டிகள் கண்டனர்.

இந்த வியப்பூட்டும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

குழந்தைகள், ஆண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்துகொள்வது.. முகம் சுளித்த தமிழர்கள் – சமூக பொறுப்பு முக்கியம்

அவர் சென்ற அந்த குறிப்பிட்ட சாலையின் வேக வரம்பு 60kmh ஆகும், மேலும் வேக வரம்பை கண்காணிக்க போலீஸ் வேக கட்டுப்பாடு கேமராக்களும் அங்கு உள்ளது.

அந்த ஊழியர் ஹெல்மெட் அணியவில்லை, வழுக்கை தலையுடன் சென்ற அவர் PMA சாதனம் மூலம் வேகமாக சென்றார்.

மேலும், ஒரே ஒரு flashing beacon விளக்குடன், பிரேக் விளக்குகள் இல்லாமல் பிரதான சாலையில் PMA சாதனம் மூலம் அவர் பயணித்தது அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்தனர்.

உணவகத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் – காத்திருக்கும் பிரம்படி