இளம் வயதுடைய 2 பையன்களை மானபங்கம் செய்த 53 வயது ஆடவருக்கு சிறை!

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேருந்தில் சென்ற நூர்மான் முகம்மது நூர் (வயது 53) என்ற ஆடவர், அதே பேருந்தில் பயணித்த இளம் வயதுடைய இரண்டு பையன்களிடம் தவறான முறையில் நடந்ததுக் கொண்டதாகவும், மானபங்க செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதே ஆண்டு பிப்ரவரி மாதம், இதேபோன்று 12 வயது மற்றும் 18 வயதுடைய வேறு இரண்டு பையன்களிடம், நூர் தனது சில்மிஷ வேலைகளை செய்ததாகவும், மானபங்க காரியங்களில் ஈடுபட்டதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு!

கைது செய்யப்பட்ட நூர் தன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசாரணையில், 1997 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூர்மான் முகம்மது நூர் கிட்டதட்ட 6 மானபங்க குற்றங்களை செய்துள்ளதாக தெரியவந்தது.

இப்படி பல முறைகள் தவறு செய்தும் திருந்தாத நூர்மான் முகம்மது நூர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் விசாரணையில் அரசு தரப்பு வாதாடியது.

நூர் செய்த இந்த மானபங்கக் குற்றங்களைக் கொண்டும், அரசு தரப்பின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டும் நூர்மான் முகம்மது நூருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

மேலும் இதற்கு முன்பு, பலமுறை நூர்மான் முகம்மது நூர் சிறைத்தண்டனை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் புதிய பயணத் திட்டத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!