சென்னையில் நடந்த சிங்கப்பூரின் 57-வது தேசிய தின விழா!

Photo: Singapore In India Official Twitter Page

சிங்கப்பூரின் 57- வது தேசிய தினத்தையொட்டி, கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி அன்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூரின் துணை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் எட்கர் பேங் மற்றும் அவரது மனைவி, சிங்கப்பூரின் தூதரக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்.

“சிங்கப்பூரில் 39 வயது இளைஞரைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

அதேபோல், சிறப்பு விருந்தினர்களாக, தமிழக அரசின் சார்பில் தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்.

விழாவில், சிறப்பு விருந்தினர்களுக்கு சிங்கப்பூர் தூதரகம் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதருடன் தமிழக அமைச்சர், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.

திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

அந்த வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டிஆர்பி ராஜா, சிங்கப்பூரில் வாழும் மன்னார்குடி பெருமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வது குறித்து சிங்கப்பூர் தூதர் எட்கர் பேங் அவர்களுடன் கலந்துரையாடினார். இதனை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.