சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மார்ச் 21- ஆம் தேதி அன்று காலை 07.00 மணி முதல் சிங்கப்பூரில் வசித்து வந்த 65 வயது சீன முதியவரை காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 52 காசியா கிரெசென்ட் (Blk 52 Cassia Crescent) என்ற இடத்தில் காணப்பட்டுள்ளார். அப்போது, சிவப்பு நிற போலோ டி-சர்ட் மற்றும் பேண்ட், காலணிகளை அணிந்திருந்துள்ளார்.
ஸ்ரீ ராமர் கோயிலில் நடந்த மஹா சண்டி யாகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ, முதியவரை யாரேனும் பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.