“67 வயதான சீன பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 67 வயதான சீனப் பெண்ணை இன்று (26/12/2022) காலை 09.00 AM மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 418 செராங்கூன் சென்ட்ரலில் (Blk 418 Serangoon Central) காணப்பட்டுள்ளார்.

ஜனவரி 2- ஆம் தேதி அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி!

அப்போது, பிங்க் நிற மேலாடை (Pink top) மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸை (Black shorts) அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) அவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ட்விட்டர் பதிவுடன் காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் காவல்துறை பதிவேற்றம் செய்துள்ளது.