தவறான செயல்களுக்காக 7 பெண்கள் கைது – போலீசார் விசாரணை

7 women arrested at Koon Seng Road

அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கூன் செங் சாலையில் 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

25 மற்றும் 34 வயதுக்குட்பட்ட அவர்கள் குடிநுழைவு சட்டம் 1961இன் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி சோதனைக்கு பெடோக் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் தலைமை தாங்கினர். மேலும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கினர்.

சிங்கப்பூரில் 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – என்ஜாய் பண்ணுங்க

சிங்கப்பூரில் சட்டவிரோத சூதாட்டம், பாலியல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 27 வரை சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட பல அமலாக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதில் 15 முதல் 81 வயதுக்குட்பட்ட 254 ஆண்களும் 115 பெண்களும் பல்வேறு குற்றங்களுக்காக பிடிபட்டனர்.

சோதனையில் சிக்கிய 369 பேரிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

மீண்டும் முதல்ல இருந்தா… சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு தான் கடும் நடைமுறை – NEW Update