சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” 73 வயதான இந்திய முதியவரை நேற்று (05/07/2022) காலை 04.22 மணி முதல் காணவில்லை. கடைசியாக அவர் புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 2 (Butik Batok West Avenue 2) அருகே நீல நிற டி- சர்ட் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்து வெள்ளை நிற பேக்கை எடுத்துச் சென்றுள்ளார். இவரை யாராவது பார்த்தால் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
அதேபோல், 88 வயதான சீன முதியவரை ஜூலை 4- ஆம் தேதி அன்று இரவு 09.19 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, காதிப் எம்ஆர்டி ஸ்டேஷனில் (Khatib MRT Station) காணப்பட்டார். வெள்ளை சட்டை, சாம்பல் நிற தொப்பி மற்றும் நீளமான பேண்டை அணிந்திருந்தார்.
இவரை யாரேனும் பார்த்தால் உடனடியாக 999 என்ற காவல்துறையின் தொலைபேசி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.