பயங்கர ஆயுதங்களுடன் கலவரம்: 9 ஆடவர்களை மடக்கி பிடித்தது போலீஸ்

singapore_incidents

சிங்கப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காக 13 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி புக்கிட் மேரா பகுதியில் உள்ள லெங்கோக் பாருவில் 15 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனி அதிக கட்டணம்!

இந்நிலையில், தாக்கிய அந்த கும்பல் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று வியாழக்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்று இரவு 8.45 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, மேலும் விசாரணையில் முன் தகராறு காரணமாக பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அவர், பல காயங்களுடன் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

விசாரணைகள் தொடர்கின்றன.

சிங்கப்பூரில் தமிழ் பணிப்பெண், ஊழியருடம் முதலாளி வீட்டில் உல்லாசம் – உடைந்துபோன முதலாளி.. “வீட்டில் ஒருவராக அனைத்தும் செய்தேன்” என வேதனை