சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டை வரவேற்க சிறப்பு நிகழ்ச்சி மெரினா பே வட்டாரத்தில் நடைபெற இருக்கிறது.
சிங்கப்பூர் மெரினா பே வட்டாரத்தில் கவுண்டவுன் 2020, புதிய வருடத்தை வரவேற்க 90 நிமிட வாணவேடிக்கையுடன் கூடிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
மல்டி சென்சார் மியூசிக் ஷோ – 2019: பட்டாசுகள், 3D சரவுண்ட் ஒலி, பல்லெட் (ballet) நடனக் கலைஞர்கள் மற்றும் தீயணைப்பு கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன, என்று நகர மேம்பாட்டு ஆணையம் (URA) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், மீடியாகார்ப் நிறுவனம் 2020ஆம் ஆண்டை வரவேற்க Promontory-இல் Let’s Celebrate 2020 எனும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர்க் கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர்.
கூடுதலாக உள்ளூர் இசைக்கலைஞர்களான ஐஸ்யா அஜீஸ், பெஞ்சமின் கெங் மற்றும் ராக்கர் ராம்லி சரிப் ஆகியோரின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நகரின் மத்திய வட்டாரத்தில் புத்தாண்டை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இரவு 7 மணிக்கு தொடங்கும், மேலும் பொதுமக்களுக்கு இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.