சிங்கப்பூரில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு..!

Abandoned baby boy found alive in bin chute at Bedok North HDB block (Photo: Cindy Co)

சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெடோக் வடக்கில் உள்ள ஒரு எச்டிபி தொகுதி குப்பைத் தொட்டியில், ஆண் குழந்தை ஒன்று நேற்று (ஜன. 7) உயிருடன் காணப்பட்டது.

இந்நிலையில், பிளாக் 534 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 3-ல் காலை 9.10 மணியளவில் உதவிக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, துணை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், சீரான நிலையில் குழந்தை இருந்ததாகவும், குழந்தைக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை, துப்புரவாளரால் அந்த குழந்தையை கண்டுபிடித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) பிரிதம் சிங் எழுதிய பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்புரவாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, இரத்தக் கறை படிந்த சூப்பர்மார்கெட் பிளாஸ்டிக் பையில் குழந்தை சுற்றப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டனர்.

இதை அடுத்து, குழந்தை கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு (KKH) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விசாரித்ததாகக் குடியிருப்பாளர்கள் CNA-யிடம் கூறினர்.

Source : CNA