சிங்கப்பூரின் முதல் லோக்கல் தமிழ் திரைப்படமான “யோகி II” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அபிராம் ஜுவல்லர்ஸ் ஏற்பாடு செய்த “யோகி II” ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் தனித்துவமான முறையில் அமைந்ததில் பெருமிதம் கொள்வதாகவும், இது ஒருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு இசை சந்திப்பைக் கொடுத்ததாக பெருமிதம் கொள்கிறோம், என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அற்புதமான இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், இந்த தருணங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக சிங்கப்பூர் அபிராமி ஜுவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து படக்குழு கூறுகையில், தாங்கள் வரலாறு படைத்து விட்டதாகவும், இனி வரக்கூடிய லோக்கல் தமிழ் திரைப்படங்களுக்கு தாங்கள் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.