வேன் தானாக சறுக்கி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக பலி

Clementi-Accident

துவாஸ் நோக்கி செல்லும் பான் தீவு விரைவுச்சாலையில் (PIE) நேற்று செப். 11 நடந்த விபத்தில் 28 வயதுமிக்க ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் கிளெமென்டி அவென்யூ 6 க்குள் செல்லும் PIE ஸ்லிப் சாலையில் வாகனம் தானாக சறுக்கியதாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூர் தமிழ் ஊழியர்களுக்கு நற்செய்தி… இனி ஒரு நிமிடத்தில் பணத்தை அனுப்ப முடியும்

இதன் காரணமாக வேன் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து அன்று காலை 6.03 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஜூரோங் காபிஷாப்பில் சண்டை: ஆண், பெண் இருவர் கைது