ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்குகிறது? – விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

 

டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தின் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?

இதில், குறிப்பாக திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி இரண்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. எனினும், மற்ற இரு நகரங்களில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் விமான சேவைகளை வழங்கி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் அடுத்துத் தடுத்து வருவதால், இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதால், பயணிகள் அதிகளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையைப் பயன்படுத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?

விமான பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.