‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- கோடைக்காலப் பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 685 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது.

உணவங்காடியில் தள்ளுபடி சலுகை!! சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி இதுதான்…

மார்ச் முதல் ஜூன் மாதங்கள் வரை கோடைக்கால சீசன் என்பதால், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பயண டிக்கெட்டுகள் இன்னும் சில நாட்களில் விற்றுத் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை இனி ஜெயண்ட், அங் மோ சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பயன்படுத்தலாம்!

பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.