வெளிநாட்டினர் ஒவ்வொரு முறை சிங்கப்பூர் வரும் போதும், குடிநுழைவு நுழைவாயில் வழியாக நேரடி அனுமதி பெறவேண்டும். அதற்கு பாஸ்போர்ட் காண்பித்து அனுமதி கிடைத்த பின்னரே மேற்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இனி சிங்கப்பூரில் பதிவு செய்த வெளிநாட்டினருக்கு அந்த முறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த வெளிநாட்டினர் என்றால், ஒருவர் சிங்கப்பூருக்கு முதல் முறையாக வரும் போது, முக அடையாளத்தையும் கருவிழி அடையாளத்தையும் பதிவு செய்து கொள்வார்கள்.
அவை எப்போதும் சேமிக்கப்பட்டே இருக்கும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மீண்டும் சிங்கப்பூர் வரும் பயணிகள் தானியக்க குடிநுழைவு அனுமதியை பெறப்போகிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இனி அடுத்தடுத்த வருகைக்கும் இந்த அனுமதி அளிக்கப்படும் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் கூறியது.
இதற்கு முன்னார் சிங்கப்பூருக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் நேரடி அனுமதி பெறவேண்டி இருந்தது.
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் 2023 ஆம் ஆண்டு முதல் எல்லாப் பயணிகளையும் தானியக்க முறையில் அனுமதிப்பது என இலக்கு வைத்துள்ளது.
இனி சிங்கப்பூரைவிட்டு வெளியேறும்போதும், திரும்பி வரும்போதும் குடிநுழைவு அனுமதி வாயிலில் பாஸ்போர்ட்டை கொடுக்க வேண்டிய அவசியம் வருங்காலத்தில் இருக்காது.
அனுமதி வாயில் வழியாக செல்லும்போது முகம், கருவிழி ஆகிய அடையாளங்களைச் சரிபார்த்து அவர்களுக்கு தானியக்க அனுமதி அளிக்கப்படும்.
உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், இவ்வாண்டின் இறுதியில் சாங்கி விமான நிலையத்தில் சிறப்பு உதவி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றார்.