ComfortDelGro அதன் கட்டணத்தை மார்ச் 1 முதல் உயர்த்தும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள மற்ற அனைத்து டாக்ஸி நிறுவனங்களும் அடுத்த மாதம் முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மற்ற டாக்ஸி நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தை மார்ச் மாதத்தில் உயர்த்த இருப்பதாக ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பொது போக்குவரத்து கழகம் (PTC) தெரிவித்தது.
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்
TransCab, Prime Taxi, Premier Taxi, Strides Taxi ஆகியவை ஓட்டுநர்களுக்குச் சொந்தமாக இயக்கப்படும் டாக்ஸி நிறுவனங்கள்.
இந்த புதிய கட்டண உயர்வைக் குறித்து பயணிகளுக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்குமாறு நிறுவனங்களுக்கு நினைவூட்டியுள்ளது PTC.
சிங்கப்பூரில் உள்ள டாக்ஸி நிறுவனங்கள் கடந்த 2011ஆம் ஆண்டு தங்களது கட்டணத்தை கடைசியாக உயர்த்தின.
“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை