பல வாகனங்கள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 61 வயது பெண் – சம்பவ இடத்திலேயே பலி

Accident in Ang Mo Kio

ஆங் மோ கியோவில் 61 வயதான பெண் ஒருவர் பேருந்து மற்றும் டாக்ஸியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார், விபத்தில் சிக்கிய பெண்ணின் மீது மோதிய பல வாகனங்களில் இவையும் அடங்கும்.

ஜூன் 20, இரவு 10.25 மணியளவில் அங் மோ கியோ தெரு 21 இல் நடந்த இந்த விபத்து, ஒரு பாதசாரி மற்றும் ஒரு டாக்ஸி மட்டும் சம்பந்தப்பட்டதாக முதலில் காவல்துறையால் கூறப்பட்டது. மேலும் விசாரணையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்டது பின்னர் தெரியவந்தது.

ஆனால் அந்த பெண் மீது முதலில் மோதிய வாகனம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
வாகனம் மோதியதில் அந்தப்பெண் நெடுதூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அந்த டாக்சி தான் முதலில் பெண் மீது மோதியதாக நம்பப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த போது, அந்த பெண்ணை இடித்து விட்டு கொஞ்ச தூரம் சென்றதும் தான் யாரையோ இடிடித்ததை உணர்ந்த டாக்சிடிரைவர் யு-டர்ன் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணை அதிகாரிகள் மற்ற ஓட்டுனர்களை தேடினர்.

பல வாகனங்கள் விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தாலும் , டாக்சி டிரைவர் மட்டுமே விபத்து நடந்த இடத்தில் இருந்தார் மற்றொருவரான (169வது வழித்தடத்தில் பேருந்தை இயக்கிய)  பேருந்து ஓட்டுநர் வேறொரு இடத்தில் கைது செய்யப்பட்டார்.