அங் மோ கியோ அவென்யூ 5 மற்றும் அங் மோ கியோ தொழில் பூங்கா 2 சந்திப்பில் காரும் லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து விபத்தில் சிக்கிய 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Zam Zam உணவகத்தின் முன்னாள் இயக்குனர் மிரட்டல் உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு
இருப்பினும், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த 68 வயதான கார் ஓட்டுநர் அதன் பின்னர் உயிரிழந்தார்.
நேற்று அக்.16 ஆம் தேதி மதியம் 1.05 மணியளவில் சாலை விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
அதில் ஒரு நபரை டான் டோக் செங் மருத்துவமனைக்கும், ஒருவரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அனுப்பி வைத்தனர்.
சிங்கப்பூரில் இதுவரை தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்கள் உஷார்