ஒரு குடும்பத்தையே திருப்பி போட்ட நிலச்சரிவு… சிங்கப்பூரில் பணிபுரிந்தவர், அவரின் மகன் பரிதாபமாக உயிரிழப்பு

தனது விடுமுறை நாட்களை கழிக்க ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றிருந்த வெளிநாட்டவர் இருவர் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

அதில் பிரிட்டிஷ் நாட்டவரான சிங்கப்பூரில் பணிபுரிந்த வழக்கறிஞர் மற்றும் அவரின் 9 வயது மகனும் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறியுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!

49 வயதுமிக்க மெஹ்ராப் நசீர் என்பவர் அவரின் குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ப்ளூ மௌண்டைன்ஸ் பகுதியில் அவர்கள் இருக்கும்போது பாறைகள் சறுக்கி விழுந்து அவர்களை தாக்கியது.

அதில், நசீர் மற்றும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், மற்றவர்களான அவரது மனைவி, மூத்த மகனுக்கு கடும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் Watson Farley & Williams நிறுவனத்தின் பார்ட்னர் திரு நசீர் என்பது கூடுதல் தகவல். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் Employment pass வைத்துள்ளவர்களின் கடந்த 3 ஆண்டு சம்பளம்… கட்டுப்பாடுகள் காரணமாக குறையும் EP