சிங்கப்பூரில் வசதியில்லாத ஏழைகளுக்கு உதவும் லாப நோக்கமற்ற அமைப்புகளை நிறுவி நடத்தி வரும் சிங்கப்பூர் மாணவர்கள் இருவருக்கு அனைத்துலக டயானா விருது வழங்கப்பட்டுள்ளது.
நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் பயிலும் 16 வயது மாணவியான அனன்யா ராவ் ,யேல்-என்யுஎஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டம் பெற்ற 23 வயது நூர் ஹசிம் அப்துல் நாசர் இருவரும் இம்மாதம் 1-ஆம் தேதி காணொளி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
சமூக சேவையில் இந்தத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் 9 முதல் 25 வரையிலான வயதுடையோரை இந்த விருது அங்கீகரிக்கிறது.காலங்கடந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது.29 நாடுகளைச் சேர்ந்த 180 இளைஞர்கள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.