தகாத காட்சிகளை படம் பிடித்த ஆடவர்.. துரத்தி மடக்கி பிடித்த பொதுமக்கள் – போலீசிடம் ஒப்படைப்பு

balestier-upskirt arrest

தகாத காட்சிகளை படம் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் ஜூன் 11, அன்று பாலஸ்டியரில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை செய்த இடத்தில் கைவரிசை காட்டிய ஊழியர் – S$173,000 மதிப்புள்ள வாட்ச் திருட்டு… ஊழியர் சிறையில் அடைப்பு

Upskirt என்னும் பாவாடைக்குள் வீடியோ எடுத்ததற்காக அவர் துரத்தப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

துரத்தப்பட்ட அவர் இறுதியாக பாலஸ்டியர் பிளாசாவின் கார் பார்க்கிங்கில் மடக்கி பிடிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, அன்று மாலை 6:30 மணியளவில் 352 பாலஸ்டியர் சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

46 வயதுடைய அவர் பெண்களிடம் வரம்பு மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவம் அடங்கிய வீடியோ காட்சிகள், நேற்று ஜூன் 12 ஆம் தேதி அன்று TikTok செயலியில் பதிவேற்றப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி