கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான ‘VTL’ விமான சேவையை மேலும் சில நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளது சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்.
இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தோனேசியா நாட்டின் டென்பான்சர் பாலியில் (Denpansar Bali) இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் மார்ச் 16- ஆம் தேதி முதல் VTL விமானங்கள் இயக்கப்படும். மலேசியாவின் பினாங்கு (Penang) நகரில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் மார்ச் 16- ஆம் தேதி முதல் VTL விமான சேவை வழங்கப்படும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு (Cebu) மற்றும் டவா (Davao) ஆகிய நகரங்களில் இருந்து ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் VTL விமான சேவை வழங்கப்படும். வியட்நாம் நாட்டின் டா நாங் (Da Nang) நகரில் இருந்து மார்ச் 27- ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கு VTL விமானங்கள் இயக்கப்படும். அதேபோல், ஹனோய் (Hanoi) மற்றும் ஹோ சி மின் சிட்டி (Ho Chi Minh City) ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு மார்ச் 16- ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் VTL விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு என்ற https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.