பெடோக்கில் உள்ள காபி கடையில் சண்டை – ஆடவர் கைது

Bedok coffee shop arrested
(Photo: Stomp)

பெடோக்கில் உள்ள காபி கடையில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து 70 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்று இரவு 10.10 மணிக்கு, 59 நியூ அப்பர் சாங்கி சாலையில் நடந்த சண்டை குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்த காவல்துறை, பின்னர் அந்த ஆடவரை கைது செய்ததாகவும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 11 பேருக்கு கிருமித்தொற்று…!

ஆன்லைனில் வெளியிடப்பட்ட காணொளியில், காபி கடையில் உள்ள குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்படுவதைக் காணமுடிகிறது.

மேலும், இந்த சர்ச்சை முக்கியமாக இரண்டு ஆண்களுக்கு இடையே முதலில் ஏற்பட்டுள்ளது, அவர்கள் ஒருவருக்கொருவர் பீர் பாட்டில்களை வீசிக்கொள்வதை காணமுடிகிறது.

தொடர்ந்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைவு