மேலிருந்து தரையில் விழுந்து சிதறிய பீர் பாட்டில்கள்! – யாரு பாத்த வேலை இது?; சிசிடிவியில் சிக்கிய நபர்!

ஏழாவது மாடியிலிருந்து பீர் பாட்டில்களை வீசிய 58 வயது நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.தமக்குக் கைகள் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் இருப்பதால் வீட்டில் உள்ள குப்பைத் தொட்டிக்குள் பாட்டில்களை வீசுவதில் சிரமம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட லிம் லாய் சூன் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் ஜூரோங் மேற்கு வட்டாரத்தில் உள்ள தமது வீட்டிலிருந்து 13 பீர் பாட்டில்களை வீசி பிறருக்கு ஆபத்து விளைவித்த குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் லிம், 13 முறை மாடி வீட்டிலிருந்து பீர் பாட்டில்களை வீசியதாக நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த நவம்பர் 17 ஆம் தேதி இது குறித்து காவல்துறைக்கு புகார் வந்ததாகக் கூறப்படுகிறது.அதே கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வசிக்கும் மற்றொரு நபர் ஏழாவது மாடியிலிருந்து பீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகப் புகாரளித்தார்.

இது தொடர்பாக காவல்துறை விசாரணையில் ஈடுபட்ட போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் லிம் அடையாளம் காணப்பட்டார்.