ஃபுட் கோர்ட் உணவகத்தில் முட்டை இருக்கும் அட்டையில் பெருச்சாளி ஒன்று சாவகாசமாக நடமாடியது பேசும் பொருளாக மாறியுள்ளது.
பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் ஃபுட் கோர்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாகவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) கூறியது.
வெளிநாட்டு ஊழியருக்கு சிறை.. பெண்ணுக்காக 3 ஊழியர்கள் இடையே பொது இடத்தில் கைகலப்பு
உணவுப் பாதுகாப்பு என்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று SFA மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதோடு சேர்த்து, கடைகளின் வளாகங்கள் சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கூறியது.
தவறிழைக்கும் நிறுவனங்கள் குறித்து www.sfa.gov.sg/feedback மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று SFA ஊக்குவிக்கிறது.
“போதுமான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், தவறிழைக்கும் நிறுவனங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்க SFA தயங்காது” என்றும் அது கூறியுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்