பிளாக் 172 Bishan ஸ்ட்ரீட் 13க்கு அடுத்து உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.
நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9) இரவு நடந்த இந்த சம்பவத்தில், தீ சுமார் 2 மீட்டர் உயரத்துக்கும் மேல் பற்றி எரிந்தது.
இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?
நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து, கொழுந்துவிட்டு எரிந்த இந்த தீயை அணைத்ததாகக் SCDF கூறியது.
தீப்பிடித்ததில் மோட்டார் சைக்கிள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் எரிந்து சேதமடைந்தது.
அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Video
முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ள 31,500 பேர்!