தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் – தானம் செய்ய முன்வர அழைப்பு விடுத்த ஓங் !

blood donation

கடந்த வாரம், சனிக்கிழமை (ஜூலை. 9), மக்கள் முன் வந்து இரத்த தானம் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ஓங் யே குங் வேண்டுகோள் விடுத்துள்ளார். A+ மற்றும் O+ இரத்தத்தின் கையிருப்பு குறைந்ததே ஓங்கின் அழைப்புக்கு காரணம் ஆகும்.

கடந்த நான்கு நாட்களில், 1,700 க்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்ததாக ஜூலை 14 அன்று ஃபேஸ்புக் பதிவில் ஓங் கூறியுள்ளார். இது எங்கள் வழக்கமான சேகரிப்பில் இருந்து 45 சதவிகிதம் அதிகமாகும் என்றும் இது அனைவரின் ஒற்றுமை மற்றும் ஆதரவின் வலுவான அடையாளமாக திகழ்வதாக கூறியுள்ளார்.

இருப்பினும், இன்னும் அதிகமான இரத்த நன்கொடையாளர்கள் தேவை என்றும் சிங்கப்பூரின் நெகட்டிவ் ரத்தக் குழுக்களுக்கான (A-, B-, O-, AB-) ரத்தப் கையிருப்பு தற்போது குறைவாக இருப்பதாக ஓங் கூறியுள்ளார். எனவே நீங்கள் இரத்த தானம் செய்ய தகுதியானவராக இருந்தால், தயவுசெய்து முன்வாருங்கள் என்று ஓங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இரத்ததானம் செய்வது எப்படி?

சிங்கப்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு இரத்த வங்கிகளில் இரத்த தானம் செய்யலாம்:

  • Outram இல் உள்ள HSA
  • Dhoby Ghaut MRT station
  • Woodlands Civic Centre
  • WestgateTower